இருவரும் ஆடை குறைத்து ஆபாசமாக நடிப்பதாக ஆந்திராவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சமீபத்தில் அனுஷ்கா, ப்ரியாமணி நடித்த இரண்டு தெலுங்கு படங்கள் ரிலீசாயின. இப்படங்களில் இருவரும் முந்தைய படங்களில் இல்லாத அளவுக்கு கூடுதல் கவர்ச்சி காட்டி இருந்தனர்.
நீச்சல் உடையிலும் நடித்திருந்ததால் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாய் திரையரங்குகளில் திரண்டு படங்களை பார்த்தார்கள்.
இதற்கு ஆந்திராவில் உள்ள சமூக ஆர்வலர் சுபுத்தா கவர்ச்சியாக நடித்த அனுஷ்காவுக்கும், ப்ரியாமணிக்கும் கண்டனம் தெரிவித்தார். மல்காஜ் கிரி நீதிமன்றத்திலும் அவர்களுக்கெதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், அனுஷ்காவும், ப்ரியாமணியும் படங்களில் கவர்ச்சியாக நடிக்கின்றனர். இதனால் இளைஞர்கள் கெட்டுப்போவார்கள். அது அவர்களை தவறான பாதைக்கும் வழிநடத்தும்.
அத்துடன் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள். எனவேதான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன் என்றார்.
இதனால், அனுஷ்கா, ப்ரியாமணி இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அவர்கள் தற்போது நடித்து வரும் படங்களிலும் ஆடை குறைப்பு செய்து கவர்ச்சியாக நடித்து வருகிறார்கள். இதனால் மேலும் சிக்கல் ஏற்படலாம் என்று தவிக்கின்றனர்.
நடிகை ப்ரியாமணி தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. |