MailPrint
நம்பிக்கையில் நயன்தாரா
[ Wednesday, 02 January 2013, 12:12.58 PM GMT +05:30 ]
சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில சர்ச்சைகளுக்கு பின், வெற்றிகரமாக தன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார் நயன்தாரா.

இவர் சமீபத்தில் தெலுங்கில் வெளியான "கிருஷ்ணம் வந்தே ஜகத்தரும்" என்ற படத்தை பெரிதும் நம்பியிருந்தார்.

இந்த படத்தின் மூலம் தெலுங்கில் உச்சத்துக்கு போய் விடலாம் என நினைத்திருந்தார்.

ஆனால் படம் ஊற்றிக் கொண்டது மட்டுமல்லாமல் இதில் நயன்தாராவின் நடிப்பு அவ்வளவாக ரசிகர்களை ஈர்க்கவில்லை.

விமர்சனங்களும் நயனுக்கு எதிராகவே வந்ததனால் கவலையடைந்துள்ளார்.

என்னுடைய திரையுலக வாழ்க்கையை, ஏதாவது ஒரு படத்தை வைத்து முடிவு செய்வது சரியல்ல.

பல படங்கள் இன்னும் கைவசம் உள்ளன. அவை அனைத்துமே நல்ல கதையம்சம் உடைய படங்கள்.

அந்த படங்கள் வெளியான பின் பாருங்கள், தெலுங்கிலும் தமிழிலும் மீண்டும் பிரபலமாகி விடுவேன் என நம்பிக்கையுடன் கூறுகிறார் நயன்தாரா.